என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 3-வது முறையாக விசாரணை
Byமாலை மலர்4 May 2022 5:21 AM GMT (Updated: 4 May 2022 5:21 AM GMT)
ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் கடந்த மாதம் 29 மற்றும் 30-ந்தேதிகளில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கோவை:
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் இந்த வழக்கு மறுவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த வழக்கில் கைதானவர்கள் மற்றும் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டவர்கள் என 220-க்கும் மேற்பட்டவர்களிடம் தற்போது மீண்டும் மறுவிசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. மேலும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடமும் போலீசார் 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.
தற்போது விசாரணையானது நீண்டு கொண்டே செல்கிறது. ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் கடந்த மாதம் 29 மற்றும் 30-ந்தேதிகளில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சில கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை பெற வேண்டியிருந்ததால் பூங்குன்றனை இன்று மீண்டும் ஆஜராகும்படி போலீசார் கூறி இருந்தனர்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் இந்த வழக்கு மறுவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த வழக்கில் கைதானவர்கள் மற்றும் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டவர்கள் என 220-க்கும் மேற்பட்டவர்களிடம் தற்போது மீண்டும் மறுவிசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. மேலும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடமும் போலீசார் 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.
தற்போது விசாரணையானது நீண்டு கொண்டே செல்கிறது. ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் கடந்த மாதம் 29 மற்றும் 30-ந்தேதிகளில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சில கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை பெற வேண்டியிருந்ததால் பூங்குன்றனை இன்று மீண்டும் ஆஜராகும்படி போலீசார் கூறி இருந்தனர்.
அதன்படி பூங்குன்றன் கோவை போலீஸ் பயிற்சி மையத்துக்கு வந்தார். அவரிடம் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். கொடநாடு எஸ்டேட் குறித்தும், ஜெயலலிதாவை சந்திக்க அங்கு அடிக்கடி வந்து சென்றவர்கள் பற்றியும், அங்கு நடைமுறையில் இருந்த செயல்பாடுகள், பணியாற்றிய நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தினர்.
இதையும் படியுங்கள்... தினசரி பாதிப்பு சற்று உயர்வு- இந்தியாவில் புதிதாக 3,205 பேருக்கு கொரோனா
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X