search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி அனல்மின் நிலையம்
    X
    தூத்துக்குடி அனல்மின் நிலையம்

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு கப்பல் மூலம் 50 ஆயிரம் டன் நிலக்கரி இன்று மாலை வருகிறது

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மொத்தம் உள்ள 5 யூனிட்டுகளில் நேற்று காலை ஒரு யூனிட் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் 840 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மொத்தம் உள்ள 5 யூனிட்டுகளில் நேற்று காலை ஒரு யூனிட் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் 840 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று மாலை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு 50 ஆயிரம் டன் நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. இதனால் கையிருப்பில் உள்ள 23 ஆயிரம் டன் நிலக்கரியை கொண்டு நேற்று பிற்பகலில் மீண்டும் வழக்கம் போல 5 யூனிட்டுகளையும் அதிகாரிகள் இயக்கினர்.

    ஆனால் நேற்று நள்ளிரவு முதல் 1, 2 மற்றும் 3வது யூனிட்டுகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. 4 மற்றும் 5வது யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நிலக்கரி வந்ததும் வழக்கம் போல் 5 யூனிட்டுகளும் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×