என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
Byமாலை மலர்28 April 2022 8:23 AM GMT (Updated: 28 April 2022 8:23 AM GMT)
சிக்சா சில்பி என்ற தலைப்பின் கீழ் சரிவிகித உணவு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்களுக்கு இணையவழியில் கட்டுரை எழுதும் போட்டியை நடந்தது
மடத்துக்குளம்:
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விக்யான் பிரச்சார் நிறுவனம், என்சிஆர்டி மற்றும் விபா ஆகியவை இணைந்து சிக்சா சில்பி என்ற தலைப்பின் கீழ் சரிவிகித உணவு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்களுக்கு இணையவழியில் கட்டுரை எழுதும் போட்டியை நடத்தியது.
அப்போட்டியில் தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களின் கட்டுரையை மதிப்பீடு செய்வதற்காக உடுமலை ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் பேராசிரியர்கள் மலர்விழி, உமாதேவி, வைஷ்ணவி, புவனேஸ்வரி மற்றும் உடுமலை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் திருமூர்த்தி, கருணாநிதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, மதிப்பீட்டு பணியினை சிறப்பாக செய்து முடித்தனர்.
மதிப்பீட்டு பணியை செய்து முடித்ததற்காக சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை ஆகார்கிராந்தி தேசிய ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கலிலியோ அறிவியல் கழக உறுப்பினர் சதீஷ்குமார் , ஜிவிஜி. கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் வழங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X