search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    வணிக உரிமம் - 237 பேர் விண்ணப்பம்

    மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் வணிகர்களுக்கு உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    தாராபுரம்:

    தாராபுரத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் வணிகர்களுக்கான உரிமம் வழங்கும் சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட உணவு வணிகம் செய்யும் வணிகர்களுக்கு உரிமம் வழங்கும் சிறப்பு முகாமிற்கு வர்த்தக கழக தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். 

    முகாமில் டீக்கடை, மளிகை கடை, ஓட்டல், பேக்கரி, காய்கறி கடை, மட்டன், சிக்கன், மீன் கடைகள் சாலையோர உணவு வணிகர்கள் உள்பட பல தரப்பினர் உரிமம் பெறுவதற்காக 237 விண்ணப்பங்களை முகாமில்அளித்தனர்.

    விண்ணப்பங்களை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் விஜய லலிதாம்பிகை உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிரஞ்சீவி மனுக்களை பெற்றுக் கொண்டனர். இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் வணிகர்களுக்கு உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×