என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாசுதேவநல்லூர் அருகே வியாசா கல்லூரியில் இருபெரும் விழா
Byமாலை மலர்22 April 2022 7:23 AM GMT (Updated: 22 April 2022 7:23 AM GMT)
வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இருபெரும் விழா நடைபெற்றது.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 2017-2020 ஆண்டு மாணவி-யருக்கான பட்டமளிப்பு விழாவும், 5-வது கல்லூரி ஆண்டு விழாவும் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி கலந்து கொண்டு மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். மாணவிகள் வருங்கால சவால்களைச் சமாளிக்கும் விதமாக மாற்றி யோசனை செய்து, வாழ்வில் பல்வேறு துறைகளிலும் முன்னேறி உயர வேண்டும் என்று கூறினார்.
மாலையில் கல்லூரியின் 5-ம் ஆண்டு விழா நடைபெற்றது. எழுத்துனர், கலைஞர் தொலைக்-காட்சியின் செய்திப்பிரிவு தலைவர் திருமாவேலன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு கல்வி, கலை, பல்கலைக்கழக அளவில் ரேங்க் வாங்கிய மாணவியருக்கும் பல்வேறு துறைகளில் சிறப்பினை காட்டிய பேராசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பெற்றோர், பொதுமக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என திராளானோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் ஈஸ்வரன் வரவேற்றார். துணை சேர்மன் பிரகாசவல்வி சுந்தர் ஆண்டறிக்கை வாசித்தார்.
கல்லூரி மாணவியர் பேரவைத் தலைவி நமீலா நன்றி கூறினார். சேர்மன் வெள்ளத்துரைப் பாண்டியன், நிர்வாக இயக்குனர் வெள்ளத்தாய், செயலாளர் சுந்தர் முன்னின்று இருபெரும் நிகழ்வுகளையும் நடத்தினர்.
பேராசிரியர்கள், பிற பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை முன்னின்று நடத்தினர்.
வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 2017-2020 ஆண்டு மாணவி-யருக்கான பட்டமளிப்பு விழாவும், 5-வது கல்லூரி ஆண்டு விழாவும் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி கலந்து கொண்டு மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். மாணவிகள் வருங்கால சவால்களைச் சமாளிக்கும் விதமாக மாற்றி யோசனை செய்து, வாழ்வில் பல்வேறு துறைகளிலும் முன்னேறி உயர வேண்டும் என்று கூறினார்.
மாலையில் கல்லூரியின் 5-ம் ஆண்டு விழா நடைபெற்றது. எழுத்துனர், கலைஞர் தொலைக்-காட்சியின் செய்திப்பிரிவு தலைவர் திருமாவேலன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு கல்வி, கலை, பல்கலைக்கழக அளவில் ரேங்க் வாங்கிய மாணவியருக்கும் பல்வேறு துறைகளில் சிறப்பினை காட்டிய பேராசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பெற்றோர், பொதுமக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என திராளானோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் ஈஸ்வரன் வரவேற்றார். துணை சேர்மன் பிரகாசவல்வி சுந்தர் ஆண்டறிக்கை வாசித்தார்.
கல்லூரி மாணவியர் பேரவைத் தலைவி நமீலா நன்றி கூறினார். சேர்மன் வெள்ளத்துரைப் பாண்டியன், நிர்வாக இயக்குனர் வெள்ளத்தாய், செயலாளர் சுந்தர் முன்னின்று இருபெரும் நிகழ்வுகளையும் நடத்தினர்.
பேராசிரியர்கள், பிற பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை முன்னின்று நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X