என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நிழல் பந்தல் அமைக்க கோரிக்கை
Byமாலை மலர்16 April 2022 9:46 AM GMT (Updated: 16 April 2022 9:46 AM GMT)
சிகிச்சைக்காக காத்திருக்கும் கர்ப்பிணிகள், தாய்மார்கள் திறந்த வெளியில் வெயிலில் நிற்க வேண்டி உள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில் அரசு துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் சுகாதார நிலையம் முன்பு பந்தல் எதுவும் அமைக்கப்படாததால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் இங்கு தடுப்பூசி செலுத்த வரும் கர்ப்பிணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து அங்குள்ள பொதுமக்கள் கூறுகையில்:
இந்த துணை சுகாதார நிலையத்திற்கு பல்வேறு பகுதியில் இருந்து கர்ப்பிணிகள், தாய்மார்கள் வருகின்றனர். வாரம் ஒரு நாள் வரும் கர்ப்பிணிகள், காத்திருந்து தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்தநிலையில் சுகாதார நிலையம் முன்பு பந்தல் எதுவும் அமைக்கப்படாததால் சிகிச்சைக்காக காத்திருக்கும் கர்ப்பிணிகள், தாய்மார்கள் திறந்த வெளியில் வெயிலில் நிற்க வேண்டி உள்ளது.
எனவே கர்ப்பிணிகள், தாய்மார்களின் நலனை கருத்தில் கொண்டு நிழல் பந்தல் அமைக்கவும், அவர்கள் அமர்வதற்கான நாற்காலி வசதி ஏற்படுத்தவும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X