search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    விவசாயி தற்கொலை சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது வழக்கு

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே விவசாயி தற்கொலையை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நல்லம்பள்ளி, 

    பாப்பாரப்பட்டி அருகே உள்ள கரியப்பனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் கணேசன்( வயது 43).விவசாயி. கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்காக இவரது  நிலத்தில் அளவீடு செய்யும் பணிக்காக கெயில் நிறுவன அதிகாரிகள் வந்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி விவசாயிகள் பாலவாடி அருகே  ஆர்பாட்டம் நடத்தினர். 

    இந்த போராட்டத்தில் விவசாயி கணேசனும் கலந்து கொண்டார். இந்த நிலையில் போராட்டம் நடத்த இடத்திலிருந்து தனது நிலத்துக்கு சென்றுள்ளார். அங்கு  அவர் தனது நிலத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் சென்று உடலை மீட்டனர். இறந்த விவசாயியின் உடலை பாலவாடி அருகே சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர்.

     பின்னர் தற்கொலை செய்து கொண்ட விவசாயி யின் உடலை எடுத்து சென்று தருமபுரி இண்டூர் ரோட்டில் செக்காரப்பட்டியில் வைத்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
    x
    இதனால்போக்குவரத்து பாதிக்கப் பட்டது.இந்நிலையில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுப்பட்ட 100 பேர் மீது இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×