search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலுக்கு வீல்சேரினை தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் மீரா ராஜன் கோவில் செயல் அலுவலர்
    X
    திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலுக்கு வீல்சேரினை தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் மீரா ராஜன் கோவில் செயல் அலுவலர்

    வசிஷ்டேஸ்வரர் கோவிலுக்கு வரும் முதியவர்களுக்காக வீல்சேர் வழங்கல்

    திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலுக்கு வரும் முதியவர்களுக்காக வீல்சேர் வழங்கப்பட்டது.
    பாபநாசம்:

    பாபநாசம் தாலுக்கா திட்டை என்று அழைக்கப்படும் தென்திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வெளியூரில் இருந்து அதிக-ளவு பக்தர்கள் தினந்தோறும் வருகின்றனர். 

    இதில் வயதான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நிலை பாதிக்கப் பட்டவர்கள் நலன் கருதி அவர்களுக்கு கோவில் வளாகத்தில் இருந்து உள்ளே சென்று சாமி தரிசனம் செய்வதற்காக

    ரூ.7 ஆயிரம் மதிப்பீட்டில் வீல்சேர் ஒன்றை தமிழ்நாடு கிராம வங்கி பாபநாசம் கிளை சார்பில் மண்டல மேலாளர் மீரா ராஜன் கோவில் செயல் அலுவலர் தனலட்சுமியிடம் வழங்கினார். 

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிராம வங்கி பாபநாசம் கிளை மேலாளர் ஹரி கிருஷ்ணன், உதவி மேலாளர் மணி ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×