search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்புதுறை அதிகாரி ஜெயசீலன் ஆய்வு செய்த காட்சி.
    X
    ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்புதுறை அதிகாரி ஜெயசீலன் ஆய்வு செய்த காட்சி.

    ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குனர் ஆய்வு

    பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குனர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமண்டபங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன் இன்று நெல்லை வந்தார்.

    அவர் பாளை கோர்ட்டு எதிர்புறம் உள்ள ஒண்டி வீரன் மணிமண்டபத்திற்கு சென்று அங்கு ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நூலகம் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அங்கு சிறுவர்களுக்கு பூங்கா அமைக்க ஆய்வறிக்கை தயாரித்து அனுப்ப உத்தரவிட்டார்.

    மேலும் ஒண்டிவீரன் வாழ்க்கை வரலாறு குறித்து புகைப்படம் வைக்கவும் கேட்டுக்கொண்டார்.

    அப்போது நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புதுறை அதிகாரி ஜெயஅருள்பதி, தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புதுறை அதிகாரி ஜெகவீரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×