search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெருமாள்புரத்தில் குட்கா கடத்திய 2 பேர் கைது

    பெருமாள்புரத்தில் விற்பனைக்கு கொண்டு சென்ற குட்காவை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை பெருமாள்புரம் சப்--இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மற்றும் போலீசார் கன்னியாகுமரி நான்கு வழி  அருகே சிவந்திபட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது,அவ்வழியே சிவந்திபட்டியை சேர்ந்த சிவமுருகன் (35), மற்றும் இசக்கிபாண்டி (35) ஆகிய 2 பேர் வந்தனர்.

    அவர்களை சோதனை செய்த போது மொத்த விற்பனைக்கு கொண்டு சென்ற சுமார் 360 கிராம் குட்கா இருந்தது. அவற்றையும், ரூ.16,310 ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×