search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கிய காட்சி.
    X
    பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கிய காட்சி.

    தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

    கோவில்பட்டி பகுதியில் தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
    கோவில்பட்டி:

    தமிழகத்தில் தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் தாகம் தீர்க்க தமிழக முதல்வர் நீர், மோர் பந்தல் அமைத்து பொது மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டுமென தி.மு.க. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். 

    அதன்பேரில் கோவில்பட்டி நகர தி.மு.க. சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு 17-வது வார்டு செயலாளர் பாஸ்கரன் ஏற்பாட்டின் பேரிலும் அரசு தலைமை மருத்துவமனை முன்பு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ் மற்றும் நகர சிறுபான்மையினர் அமைப்பாளர் திலக் பாபு, ஆகியோர் ஏற்பாட்டின் பேரிலும் மோர் பந்தல் அமைக்கப்பட்டு மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

     மோர் பந்தலை கோவில்பட்டி நகர்மன்றத் தலைவரும் நகரச் செயலாளருமான கா.கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். 

    நிகழ்ச்சியில்மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன் மற்றும் மாரிச்சாமி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராஜகுரு, கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×