search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிவாரணத்தொகை பெற  விண்ணப்பம்.
    X
    நிவாரணத்தொகை பெற விண்ணப்பம்.

    கொரோனா நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    கொரோனா நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மதுரைமாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    மதுரை 

    தமிழக அரசின் சார்பில் கொரோனா நோய் பாதித்து இறந்த குடும்பத்தினர் வாரிசுகளுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. 

    இதற்காக ஷ்ஷ்ஷ்.tஸீ.ரீஷீஸ்.வீஸீ இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு, நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 3470 பேர் இதுவரை விண்ணப்பித்து உள்ளனர். அதில் 2622பேரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு நிவாரணதொகை வழங்கப்பட்டு உள்ளது. 

    இது தவிர 310 விண்ணப்பங்கள் இருமுறை பெறப்பட்டதால் நிராகரிக்கப்பட்டது. எஞ்சிய சில விண்ணப்பங்களில் மருத்துவஆவணம் முழுமையாக தாக்கல் செய்யப்படவில்லை. அந்த மனுக்கள் மருத்துவ ஆவணசரிபார்ப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    கொரோனா பாதித்து இறந்தவர்க்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் அடுத்த மாதம் 18ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த காலக் கெடுவுக்குள் விண்ணப்பிக்க இயலாதவர்கள், காலதாமத காரணங்களுடன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

    -மேற்கண்டதகவலை மதுரைமாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×