என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் இருந்து ஈத்தாமொழிக்கு உறவினரின் திருமணத்திற்கு வந்தவர் குளத்தில் மூழ்கி பலி
ஈத்தாமொழி:
நீலகிரியை அடுத்த கீழ் குந்தவை பகுதியை சேர்ந்தவர் யோகேஸ்வரன். (வயது 42).
இவரது உறவினர்கள் நாகர்கோவிலை அடுத்த ஈத்தாமொழியில் வசித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் பங்கேற்க யோகேஸ்வரன் நீலகிரியில் இருந்து ஈத்தா மொழி வந்தார்.
அவருடன் அங்கிருந்து சில நண்பர்களும் வந்திருந்தனர். அனைவரும் நேற்று மாலை வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பின்பு யோகேஸ்வரன் மட்டும் வெளியே சென்றார்.
வெளியே சென்ற யோகேஸ்வரன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடினர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அந்த பகுதியில் உள்ள குளத்திற்கு சென்றனர்.
குளக்கரையில் யோகேஸ்வரன் அணிந்திருந்த உடைகள் இருந்தது. இதை கண்டதும் அவர் குளத்திற்குள் மூழ்கி இருக்கலாம் எனக்கருதிய உறவினர்கள், அங்கு தேடினர்.
பின்னர் தீயணைப்பு வீரர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து குளத்தில் குதித்து தேடினர்.
அப்போது யோகேஸ்வரன் குளத்தின் சகதியில் சிக்கி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள், அதனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணத்திற்கு வந்தவர் குளத்தில் மூழ்கி இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்