search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீரில் மூழ்கி பலி
    X
    நீரில் மூழ்கி பலி

    தூத்துக்குடியில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

    தூத்துக்குடியில் குளத்தில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் மாரிமுத்து. பெயிண்டர். இவரது மகன் சுடலை (வயது 15). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் சுடலை நேற்று மதியம் தனது நண்பர்களுடன் விளையாட செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய மாரிமுத்து, தனது மகனை காணாமல் அதிர்ச்சி யடைந்தார். அக்கம் பக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் சுடலை கிடைக்கவில்லை. இதனால் அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    எனினும் மாரிமுத்து தொடர்ந்து மகனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சுடலை, நண்பர்களுடன் கோரம் பள்ளம் அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றதாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீர் மூழ்கி இழுத்து செல்லப்பட்டதும் தெரிய வந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் பயத்தில் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். இந்த தகவல் மாரிமுத்துவுக்கு நள்ளிரவு 12 மணிக்கு தெரியவந்தது. உடனே அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் இரவு நேரம் என்பதாலும், அங்கு மின்விளக்கு வசதி இல்லாததாலும் குளிக்க சென்ற சிறுவர்களுக்கு தாங்கள் குளித்த பகுதி சரியாக தெரியவில்லை. இதனால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இந்நிலையில் இன்று அதிகாலை சுடலை உடல் குளத்தில் மிதந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குளத்தில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×