search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிறைவு விழா நடந்தது.
    X
    நிறைவு விழா நடந்தது.

    தேசிய சேவை திட்ட முகாம் நிறைவு

    திருக்குவளை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய சேவை திட்ட முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
    திருத்துறைப்பூண்டி:

    அண்ணா பல்கலைக்கழகம் சென்னை-திருக்குவளை பொறியியல் கல்லு£ரியில் தேசிய சேவை திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

    விழாவில் புலமுதல்வர் முனைவர்ஜி.இளங்கோவன் தலைமை தாங்கினார். முனைவர் தெய்வீகன்இளைஞர்களின் சேவையும் தொண்டும் என்ற தலைப்பிலும், முனைவர் துளசி இளைய சமுதாயமே முன்னேறு என்ற தலைப்பிலும், முத்தமிழ் பண்பாட்டு பாசறை செயலர்.அ. கந்தன் வாழ்வும் வளமும் என்ற தலைப்பிலும், முத்தமிழ் பண்பாட்டு பாசறை தலைவர் திருஆரூர் சீனிவாசன் வையத் தலைமை கொள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

    விழாவில் ராய் டிரஸ்ட் நிறுவனரும், அகில இந்திய கட்டுநர் சங்க தலைவருமான முனைவர் நா.துரைராயப்பன் ரத்ததான சேவையையும் அதன் பயன்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை மாணவர்களுக்கு வலியுறுத்தி, அதன் பயன்களை எடுத்துரைத்தார்.

    இறுதியாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரும், உதவி பேராசிரியருமான கணேஷ்குமார் நன்றி கூறினார். இந்த சேவைத் திட்டத்தில் கலந்துக் கொண்ட மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை அனைத்து சிறப்பு விருந்தினர்களும், முதல்வரும் வழங்கினர்.

    Next Story
    ×