என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கங்கைகொண்டானில் சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்
Byமாலை மலர்23 March 2022 7:59 AM GMT (Updated: 23 March 2022 7:59 AM GMT)
கங்கைகொண்டானில் இன்று சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கயத்தாறு:
நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யக்கோரி இன்று திடீரென நெல் மூட்டைகளுடன் திரண்டனர்.
பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு கங்கைகொண்டான் நெடுஞ்சாலையில் நெல்லை கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் அப்பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கங்கைகொண்டான் பஞ்சாயத்து தலைவர் கவிதா, கவுன்சிலர் மாலதி செல்லத்துரை, பதிநான்காம்பேரி விவசாய சங்க தலைவர் இலோசியஸ், அலங்காரபேரி விவசாய சங்க தலைவர் கொம்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. ஜெபராஜ் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவாத்தை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X