என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தஞ்சையை சேர்ந்த மாணவ-மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
Byமாலை மலர்18 March 2022 9:29 AM GMT (Updated: 18 March 2022 9:29 AM GMT)
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவ&மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப நல்ல பயிற்சி , தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் பின்வரும் இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சளவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களின் செயல்பட்டு வருகின்றன.
மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ஆம் வகுப்பு, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் வரும் 23-ந் தேதி (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
மாணவர்களுக்கான விளையாட்டு பிரிவுகள் பின்வருமாறு :-
தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை ,கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபாடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை.
மாணவிகளுக்கான விளையாட்டு பிரிவுகள் தடகளம், இறகுபந்து, கூ.டைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்லோண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபாடி, டென்னிஸ் மற்றும் ஜூடோ மற்றும் ஸ்குவாஷ் ஆகும்.
மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் அதற்கான உரிய படிவங்களுடன் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் படிவத்தினை பூர்த்தி செய்ய கடைசி தேதி வருகிற 22-ந் தேதி மாலை 4 மணியாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X