என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சியாமளாதேவி கோவிலில் தீமிதி திருவிழா
Byமாலை மலர்15 March 2022 8:33 AM GMT (Updated: 15 March 2022 8:33 AM GMT)
கள்ளப்பெரம்பூர் அருகே சியாமளாதேவி கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
வல்லம்:
தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூர் இரண்டாம் சேத்தியில் கருணை மழை பொழியும் சியாமளாதேவி (என்கிற) காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 7-ம் தேதி காலை திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் 9-ம் தேதி கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், 11-ம் தேதி அம்மன் சக்தி
கரக புறப்பாடு, 12-ம் தேதி காவடியும், இரவு அம்மன் சக்தி கரக புறப்பாடும் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான
பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
திருவிழாவில் கள்ளப்பெரம்பூர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கள்ளப்பெரம்பூர் போலீசார் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X