search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் கடைசி குழுவினரை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வரவேற்றார்.

    இதையடுத்து, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சுப்பிரமணியன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட மத்திய அரசுக்கும், வெளியுறவுத் துறை மந்திரிக்கும் நன்றி தெரிவித்தார் .

    Next Story
    ×