search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன்.
    X
    சிறப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன்.

    பல்லடம் அருகே மாகாளி அம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா

    முக்கிய நிகழ்வாக பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஊர்மக்கள் ஒன்றிணைந்து மாகாளியம்மன்,மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராமத்தில் மாகாளியம்மன்,மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த வருட பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி துவங்கி முளைப்பாரி இடுதல், காப்புக்கட்டுதல், மாரியம்மன் கும்பம் தரித்தல், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன .

    முக்கிய நிகழ்வாக பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஊர்மக்கள் ஒன்றிணைந்து மாகாளியம்மன்,மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. பின்னர் அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×