search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடத்தல்
    X
    கடத்தல்

    பள்ளி மாணவி கடத்தல்

    ராமநாதபுரத்தில் பள்ளி மாணவியை கடத்தியதாக வாலிபர் மீது புகார் கூறப்பட்டுள்ளது
    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள ஆண்டிச்சி குளம் கிராமத்தை சேர்ந்த 17வயது சிறுமி சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளிக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. 

    இது குறித்து மாணவியின் தந்தை  கொடுத்த புகாரின் பேரில்  உறவினரான மருதுபாண்டி(30)  என்பவர் தனது மகளை கடத்திச்சென்றதாக குறிப்பிட்டுள்ளார். அவரது புகாரின் பேரில் சிக்கல் இன்ஸ்பெக்டர் முருகதாஸ், சப்இன்ஸ்பெக்டர் சாரதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×