search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மோதிரம் வழங்கினார்.
    X
    குழந்தைகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மோதிரம் வழங்கினார்.

    திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தங்கமோதிரம் வழங்கினார்.
    திருச்செந்தூர்:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த  குழந்தைகளுக்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தங்க மோதிரம் வழங்கினார்.
     
    தொடர்ந்து அவர் திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் வழங்கினார்.

    பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார்.

    நிகழ்ச்சியில், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம்,  திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×