search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birth baby"

    ராஜபாளையம் அருகே 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் இதற்கு காரணமான நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.

    பெற்றோர் பெரும்பாலான நாட்களில் வேலைக்கு சென்றதால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்பட்டது. இதனை பெற்றோரும் கண்டு கொள்ள வில்லை என கூறப்படுகிறது.

    சிறுமிக்கு வயிறு பெரிதாக காணப்பட்டது. இதனை காலம் கடந்து உணர்ந்த பெற்றோர் உடனே சிறுமியை ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்த போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கருவை கலைக்க முடியுமா? என டாக்டர்களிடம் கேட்டனர். நிலைமை கைமீறியதால் அதற்கு சாத்தியம் இல்லை என மறுத்து விட்டனர்.

    இதனிடையே அந்த சிறுமிக்கு ஆபரேசன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. மைனர் சிறுமி என்பதால் பிறந்த குழந்தை மதுரையில் உள்ள காப்பகத்தில் ஓப்படைக்கப்பட்டது. அந்த சிறுமி விருதுநகரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

    சிறுமியின் வாழ்க்கையை சீரழித்து கர்ப்பமாக்கிய நபர் யார்? என தெரிய வில்லை. இதுகுறித்து சிறுமியின் தாயார் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வேலூர் ஜெயிலில் அடைக்கபட்டுள்ள பெண் கைதி முத்துலட்சுமிக்கு இன்று ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

    வேலூர்:

    ஜெயிலில் குழந்தையுடன் அடைக்கபட உள்ள பரிதாப நிலைக்கு தள்ளபட்ட முத்துலட்சுமி மாமனாருடன் உல்லாசமாக இருப்பதில் இடையூராக இருந்ததாக நினைத்து அவரது கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 6 வயது சிறுமி கொலையில் தண்டனை பெற்றுள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை அடுத்த ஜடையன்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிகவுண்டர் (வயது 66). இவரது மகன் கோபாலகிருஷ்ணன்(35). லாரி டிரைவர். இவரது முதல் மனைவி தீபா. கடந்த 2011-ம் ஆண்டு இறந்துவிட்டார்.

    இவர்களுக்கு 6 வயதில் மகள் இருந்தார். இந்த நிலையில் கோபாலகிருஷ்ணனுக்கும், முத்துலட்சுமிக்கும் இரண்டாவதாக திருமணம் நடந்தது. கோபாலகிருஷ்ணன் லாரி டிரைவராக வேலை செய்து வந்ததால், அடிக்கடி வெளியூர் சென்றுவிட்டு, மாதத்திற்கு ஒருமுறை மட்டும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

    இதனிடையே பழனிகவுண்டருக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு, இருவரும் வீட்டிலேயே உல்லாசமாக இருந்துள்ளனர்.

    அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பழனிகவுண்டர், முத்துலட்சுமி இருவரும் உல்லாசமாக இருந்த போது, கோபாலகிருஷ்ணனின் முதல் மனைவியின் 6 வயது மகளால் தங்கள் சந்தோசத்திற்கு இடையூறு ஏற்படும் என்று முத்துலட்சுமி கூறினார்.

    இதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது 6 வயது பேத்தியை தூக்கி சென்று அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் வைத்து பழனிகவுண்டர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதில் கதறி மயங்கிய நிலையில் இருந்த அந்த சிறுமியை, முத்துலட்சுமி துணியால் சுற்றி கொடுக்க, அந்த சிறுமியை பழனிகவுண்டர் தூக்கி சென்று அவர்களுக்கு சொந்தமான கிணற்றில் வீசி கொலை செய்தார்.

    இது குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து, பழனிகவுண்டர் மற்றும் அவரது மருமகள் முத்துலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கில் கடந்த 10-ந் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அதில் பேத்தி என்றும் பாராமல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக பழனி கவுண்டருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அபராதமாக ரூ. 5 ஆயிரமும், உடந்தையாக இருந்த முத்துலட்சுமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. இரண்டாயிரத்து 500 அபராதமும் விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

    அப்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்த முத்துலட்சுமி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்தது.

    ×