என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா
Byமாலை மலர்2 March 2022 8:42 AM GMT (Updated: 2 March 2022 8:42 AM GMT)
தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா நடைபெற்றது
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கொடைக்கானல் மலையடி வாரத்தில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகாசிவராத்திரி விழா 6 நாட்கள் நடைபெறும். திருவிழா வெகு விமரிசையாக கொண்டா டப்படும். இந்த வருடம் மாசித் திருவிழாவிற்காக கோவிலில் கொடியேற்றம் கடந்த மாதம் 8ம் தேதி நடைபெற்றது. இதனை தொடந்து நேற்று (1ம் தேதி) முதல் திருவிழா தொடங்கி வருகிற 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கோவில் திருவிழா விற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். மேலும் திருவிழா தொடக்கமாக கோவிலின் அறங்காவலர்கள் மஞ்சளாற்றின் கரையில் இருந்து காமாட்சி அம்மனின் பொருட்கள் அடங்கிய பெட்டியை அலங்காரம் செய்து அதை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து குல தெய்வ வழிபாட்டிற்காக வந்த பக்தர்கள் பால்குடம், காவடி, மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்து செல்கின் றனர்.
4 போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் செயல் அலுவலர் வைரவன் தொடர்ந்து நிர்வாகப் பணிகளை கவனித்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கொடைக்கானல் மலையடி வாரத்தில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகாசிவராத்திரி விழா 6 நாட்கள் நடைபெறும். திருவிழா வெகு விமரிசையாக கொண்டா டப்படும். இந்த வருடம் மாசித் திருவிழாவிற்காக கோவிலில் கொடியேற்றம் கடந்த மாதம் 8ம் தேதி நடைபெற்றது. இதனை தொடந்து நேற்று (1ம் தேதி) முதல் திருவிழா தொடங்கி வருகிற 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கோவில் திருவிழா விற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். மேலும் திருவிழா தொடக்கமாக கோவிலின் அறங்காவலர்கள் மஞ்சளாற்றின் கரையில் இருந்து காமாட்சி அம்மனின் பொருட்கள் அடங்கிய பெட்டியை அலங்காரம் செய்து அதை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து குல தெய்வ வழிபாட்டிற்காக வந்த பக்தர்கள் பால்குடம், காவடி, மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்து செல்கின் றனர்.
4 போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் செயல் அலுவலர் வைரவன் தொடர்ந்து நிர்வாகப் பணிகளை கவனித்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X