என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஒரே நாளில் 3-வது முறையாக உயர்வு- ரூ.40 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
Byமாலை மலர்24 Feb 2022 1:04 PM GMT (Updated: 24 Feb 2022 1:04 PM GMT)
தங்கம் விலை இன்று ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்து பவுன் ரூ.40 ஆயிரத்தை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. ஒருநாள் விலை ஏறுவதும், மறுநாள் விலை குறைவதுமாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் இன்று காலை நிலவரப்படி பவுனுக்கு ரூ.864 உயர்ந்துள்ளது. நேற்று தங்கத்தின் விலை கிராம் ரூ. 4,719 ஆக இருந்தது. இன்று இது ரூ.4,827 ஆக உயர்ந்துள்ளது. பவுன் ரூ.37,752-ல் இருந்து ரூ.38, 816 ஆக அதிகரித்தது.
ரஷியா- உக்ரைன் போர் எதிரொலியால் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மதியம் இரண்டாவது முறையாக உயர்ந்தது. தொடர்ந்து மாலை வேளையில் 3-வது முறையாக மீண்டும் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.4,951க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.1,856 உயர்ந்து ரூ.39,608க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்து பவுன் ரூ.40 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்த அதிரடி விலை ஏற்றம் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக நகை வியாபாரி ஒருவர் தெரிவித்தார். தங்கம் விலை மேலும் அதிகரிப்பதற்கான சூழ்நிலையும் உருவாகி உள்ளது.
வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.68.70 ஆக இருந்த வெள்ளி விலை இன்று ரூ.72.70 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கிலோ ரூ.68,700-ல் இருந்து ரூ.72,700 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள்.. புதினிடம் பேசி போரை நிறுத்தச் சொல்லுங்கள்... மோடிக்கு உக்ரைன் தூதர் வேண்டுகோள்
இந்த சூழ்நிலையில் இன்று காலை நிலவரப்படி பவுனுக்கு ரூ.864 உயர்ந்துள்ளது. நேற்று தங்கத்தின் விலை கிராம் ரூ. 4,719 ஆக இருந்தது. இன்று இது ரூ.4,827 ஆக உயர்ந்துள்ளது. பவுன் ரூ.37,752-ல் இருந்து ரூ.38, 816 ஆக அதிகரித்தது.
ரஷியா- உக்ரைன் போர் எதிரொலியால் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மதியம் இரண்டாவது முறையாக உயர்ந்தது. தொடர்ந்து மாலை வேளையில் 3-வது முறையாக மீண்டும் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.4,951க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.1,856 உயர்ந்து ரூ.39,608க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்து பவுன் ரூ.40 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்த அதிரடி விலை ஏற்றம் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக நகை வியாபாரி ஒருவர் தெரிவித்தார். தங்கம் விலை மேலும் அதிகரிப்பதற்கான சூழ்நிலையும் உருவாகி உள்ளது.
வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.68.70 ஆக இருந்த வெள்ளி விலை இன்று ரூ.72.70 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கிலோ ரூ.68,700-ல் இருந்து ரூ.72,700 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள்.. புதினிடம் பேசி போரை நிறுத்தச் சொல்லுங்கள்... மோடிக்கு உக்ரைன் தூதர் வேண்டுகோள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X