search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold Rate"

    • இறக்குமதி வரி குறைக்கப்பட்ட 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது.
    • தங்கத்தின் மீதான மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை நகை வியாபாரிகள் வரவேற்றுள்ளனர்.

    சென்னை:

    கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.44 ஆயிரமாக இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை திடீரென்று அதிகரிக்க தொடங்கியது. கடந்த 19-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.55 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. ஒரே ஆண்டில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.11 ஆயிரம் அதிகரித்திருப்பது சாதாரண மற்றும் நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    ஆனாலும் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தங்கம் விலை உயர்வு கூடுதல் சுமையாகவே இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிகரித்து வந்ததை கண்டு நகை வியாபாரிகளும், நகை வாங்குவோரும் கவலை அடைந்தனர்.

    இந்த நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தங்கம் விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.2,200 குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.54,600-க்கு விற்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.52,400-க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் ஒரு கிராம் ரூ.275 குறைந்து ரூ. 6,550-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு மேலும் ரூ.480 குறைந்தது. இதனால் இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.51,920-க்கு விற்கப்படுகிறது. இறக்குமதி வரி குறைக்கப்பட்ட 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.335 குறைந்துள்ளது.


    இதையடுத்து தங்கத்தின் மீதான மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை நகை வியாபாரிகள் வரவேற்றுள்ளனர். மேலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் சென்னையில் உள்ள நகைக்கடைகளில் இன்று வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் நகைக்கடைகளில் இன்று தங்க நகைகள் விற்பனை அதிகரித்தது.

    இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் கூறியதாவது:-

    மத்திய அரசு வருவாயை பெருக்குவதற்காக இதற்கு முன்பு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 8 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இதனால் அப்போது தங்கம் விலை அதிகரித்தது. இதையடுத்து தங்க நகைகள் விற்பனையும் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். இறக்குமதி வரி 9 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் தங்கம் விலையும் 9 சதவீதம் குறைந்துள்ளது.

    இனிவரும் நாட்களில் தங்கத்தின் விலை இந்த அளவிலேயே நீடிக்கும். இப்போதைக்கு விலை அதிகரிக்க வாய்ப்பில்லை. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்தால் மட்டுமே தங்கம் விலை இனி மாற வாய்ப்பு உள்ளது. அதுவரை இந்த விலைதான் நீடிக்கும்.

    தங்கம் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இன்று காலையில் இருந்தே நகைக்கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. தங்க நகைகள் விற்பனையும் அதிகரித்தது. இன்று மட்டும் தங்க நகைகள் விற்பனை 10 சதவீதம் அதிகரித்தது.

    இனிவரும் நாட்களில் தங்கம் விலை இதே நிலையில் நீடிக்கும் நிலையில் தங்க நகைகள் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நடுத்தர, ஏழை, எளிய மக்கள் அதிகளவில் தங்க நகையை வாங்குவார்கள்.

    தற்போது ஆடி மாதம் என்பதால் நகைக்கடைகளில் சிறப்பு விற்பனையும் நடந்து வருகிறது. இதன்படி தங்க நகைகள் வாங்குபவர்களுக்கு விலை குறைப்பு உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆடி மாதத்தில் தங்க நகைகள் விற்பனை களை கட்டும்.

    அடுத்த மாதம் ஆவணி மாதம் திருமண சீசன் என்பதால் இன்னும் 2 மாதங்களுக்கு நகைகள் விற்பனை நன்றாக இருக்கும். இதனால் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைத்திருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் வெள்ளி மீதான இறக்குமதி வரியும் 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளி விலையும் 2 நாட்களில் கிராமுக்கு 4 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் குறைந்துள்ளது. இதனால் வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் விற்பனையும் இன்று அதிகரித்துள்ளது.

    பிளாட்டினம் மீதான இறக்குமதி விலையும் 15.4 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பிளாட்டினம் நகைகளும் அதிகமாக விற்பனையாகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 6455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • ஒரு பவுனுக்கு 680 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வன்ணமாகவே உள்ளது. கடந்த வாரம் இதுவரை இல்லாத வகையில் 50 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை பவுனுக்கு 680 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கம் ஒரு பவுன் 51 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 6,455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • இன்று கிராமுக்கு 25 ரூபாய் அதிகரிப்பு.
    • ஒரு கிராம் 5755 ரூபாய்க்க்கு விற்பனை.

    ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது. இன்று கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 5,755 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதன்மூலம் ஒரு பவுன் (8 கிராம்) தங்கத்தின் விலை 46 ஆயிரம் ரூபாயைத் தாண்டி 46,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    30 நாட்களுக்கு முன் ஒரு பவுன் 45,512 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 60 நாட்களுக்கு முன் 44,648 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த ஆண்டு 43,664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 3 வருடத்திற்கு முன் ஒரு கிராம் 4898 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் ஐந்தாயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 உயர்வு
    • 1 கிராம் தங்கம் ரூ.5,700-க்கும், பவுன் ரூ.45,600-க்கும் விற்பனை

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் தங்கத்தின் விலை மாறுபடும்.

    தற்போது இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடந்து வரும் சண்டை உச்சமடைந்து உள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக தங்கத்தின் விலையும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.

    நேற்று தங்கத்தின் விலை கிராம் ரூ. 5,635- ஆகவும், பவுன் ரூ. 45,080 ஆகவும் இருந்தது.

    இந்நிலையில், இன்று ஒரே நாளில் கிராம் ரூ.65-ம், பவுன் ரூ. 520-ம் அதிகரித்துள்ளது. இன்று கிராம் ரூ. 5700-க்கும், பவுன் ரூ. 45,600-க்கும் விற்பனை ஆகிறது.

    • இன்று தங்கம் விலை பவுனுக்கு 72 ரூபாய் உயர்ந்துள்ளது.
    • 1 கிராம் தங்கம் 5,695-க்கும், பவுன் 45,560 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் தங்கத்தின் விலை மாறுபடும்.

    தற்போது இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடந்து வரும் சண்டை உச்சமடைந்து உள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக தங்கத்தின் விலையும் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கியது.

    கடந்த 19-ம் தேதி பவுன் ரூ. 44,680-க்கு விற்ற தங்கத்தின் விலை தொடந்து அதிகரித்து சில தினங்களுக்கு முன் ரூ. 46 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது.

    நேற்று தங்கத்தின் விலை கிராம் ரூ. 5,686-ஆகவும், பவுன் ரூ. 45,488 ஆகவும் இருந்தது.

    இந்நிலையில், இன்று ஒரே நாளில் கிராம் ரூ. 9-ம் பவுன் ரூ. 72-ம் குறைந்துள்ளது. இன்று கிராம் ரூ. 5695-க்கும், பவுன் ரூ. 45,560-க்கும் விற்பனை ஆகிறது.

    • இன்று தங்கம் விலை பவுனுக்கு 232 ரூபாய் குறைந்துள்ளது.
    • 1 கிராம் தங்கம் 5,686-க்கும், பவுன் 45,488 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் தங்கத்தின் விலை மாறுபடும்.

    இந்நிலையில், தற்போது இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடந்து வரும் சண்டை உச்சமடைந்து உள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக தங்கத்தின் விலையும் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கிவிட்டது.

    கடந்த 19-ம் தேதி பவுன் ரூ. 44,680-க்கு விற்ற தங்கத்தின் விலை தொடந்து அதிகரித்து சில தினங்களுக்கு முன் ரூ. 46 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது.

    நேற்று ஒரு கிராம் 5,715 ரூபாய்க்கும், ஒரு பவுன் 45,720 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

    நேற்று தங்கத்தின் விலை கிராம் ரூ. 5,715- ஆகவும், பவுன் ரூ. 45,720 ஆகவும் இருந்தது. இன்று ஒரே நாளில் கிராம் ரூ.29-ம் பவுன் ரூ. 232-ம் குறைந்துள்ளது. இன்று கிராம் ரூ. 5686-க்கும், பவுன் ரூ. 45,488-க்கும் விற்பனை ஆகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • இன்று தங்கம் விலை பவுனுக்கு 520 ரூபாய் அதிகரித்துள்ளது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் தங்கத்தின் விலை மாறுபடும்.

    இந்நிலையில், தற்போது இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடந்து வரும் சண்டை உச்சமடைந்து உள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக தங்கத்தின் விலையும் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கிவிட்டது.

    கடந்த 19-ம் தேதி பவுன் ரூ. 44,680-க்கு விற்ற தங்கத்தின் விலை தொடந்து அதிகரித்து இன்று ரூ. 46 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்துள்ளது.

    நேற்று தங்கத்தின் விலை கிராம் ரூ. 5,705- ஆகவும், பவுன் ரூ. 45,640 ஆகவும் இருந்தது. இன்று ஒரே நாளில் கிராம் ரூ.65-ம் பவுன் ரூ. 520-ம் உயர்ந்துள்ளது. இன்று கிராம் ரூ. 5,770-க்கும், பவுன் ரூ. 46,160-க்கும் விற்பனை ஆகிறது. இஸ்ரேல் போர் காரணமாக தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக நகைக்கடை அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவை பொறுத்தவரை காலம் காலமாக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில பெண்களிடம் தங்கத்தின் மீதான மோகம் அதிகமாக இருந்து வருகிறது. தங்க நகையை அணிவதை நம் நாட்டு பெண்கள் ஒரு கவுரவமாக நினைத்து வருகின்றனர்.

    ஆனால் தற்போது தங்கம் விலை வேகமாக உயர்ந்து வருவது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏழைகளுக்கு இது எட்டாக்கனியாக மாறி உள்ளது.

    தற்போது முகூர்த்த மாதம் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகிறது. இதனால் நகை வாங்க இருந்தவர்கள் விலை உயர்வை நினைத்து கவலை அடைந்து இருக்கிறார்கள்.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. கிராம் ரூ. 77.50க்கும், கிலோ ரூ. 77,500-க்கும் விற்பனை ஆகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது
    • நேற்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்த நிலையில், இன்று 45 ரூபாய் அதிகரிப்பு

    கடந்த வாரம் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தங்கம் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. அதன்பின் இறங்கு முகமாகவும், ஏறுமுகமாகவும் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை கிராம் ஒன்றிற்கு 45 ரூபாய் அதிகரித்து பவனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது.

    1 கிராம் தங்கம் 5700-க்கும், பவுன் 45,600 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. நேற்று ஒரு கிராம் (8 கிராம்) 5,655 ரூபாய்க்கும், ஒரு பவுன் 45,240 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

    24 காரட் தங்கம் ஒரு கிராம் 6,220 ரூபாய்க்கும், ஒரு பவுண் 49,460-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    22 காரட் தங்கம், கடந்த 18-ந்தேதி ஒரு கிராம் 5,565 ரூபாய்க்கும், 19-ந்தேதி 5,585 ரூபாய்க்கும், 20-ந்தேதி 5,660 ரூபாய்க்கும், 21-ந்தேதி 5,670-க்கும், 22-ந்தேதி 5,670-க்கும் விற்பனை ஆனது.

    23-ந்தேதி 5,660 ரூபாய்க்கும், 24-ந்தேதி 5675 ரூபாய்க்கும், நேற்று 5,655 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

    • சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை உயர்வு.
    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.5,510க்கு விற்பனை.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே இன்று 7வது நாளாக போர் நடந்து வருகிறது.

    இதன் எதிரொலியால், இன்றைய தினம் தங்கம் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 54 டாலர்கள் அதிகரித்ததே உள்நாட்டிலும் விலை உயர காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.5,510க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதுபோல், தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.44,082க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • பட்ஜெட்டில் வரி உயர்த்தப்பட்ட நிலையில் தங்கம் விலை உயரத் தொடங்கியது.
    • சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 5505 ரூபாயாக உள்ளது

    சென்னை:

    சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு சவரனுக்கு 600 ரூபாய் வரை உயர்ந்து அதிர்ச்சி அடைய வைத்தது. ஒரு சவரன் 43320 ரூபாயாக இருந்தது.

    நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், வைரம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் வரும் காலங்களில் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. 

    இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 720 ரூபாய் வரை உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 44000-ஐ தாண்டியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பிற்பகல் நிலவரப்படி சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 5505 ரூபாயாகவும், ஒரு சவரன் 44 ஆயிரத்து 40 ரூபாயாகவும் விற்பனை ஆனது. இதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் 80 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய 80 காசுகளாக இருந்தது. பார் வெள்ளி (ஒரு கிலோ), ரூ.77800 ஆக இருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் விலை ஏற்றம் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • வெள்ளி விலை கிலோவுக்கு ரூ1300 உயர்ந்து 77,300க்கு விற்பனையாகிறது.

    தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து 5 ஆயிரத்து 475 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இன்றைய சந்தை நிலவரப்படி 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.43 ஆயிரத்து 800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் விலை ஏற்றம் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ1300 உயர்ந்து 77,300க்கு விற்பனையாகிறது.

    • கிராமுக்கு ரூ. 55 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் விலை 5,010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு 700 ரூபாய் அதிகரித்து 70,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து, 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 40,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    அதன்படி, கிராமுக்கு ரூ. 55 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் விலை 5,010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் விலை 40 ஆயிரம் ரூபாயை தாண்டியது. தங்கம் விலை அதிகரிப்பால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதேபோல், வெள்ளி கிலோவுக்கு 700 ரூபாய் அதிகரித்து 70,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×