என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இந்த வாரம் தடுப்பூசி முகாம் நடைபெறாது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Byமாலை மலர்24 Feb 2022 8:00 AM GMT (Updated: 24 Feb 2022 8:00 AM GMT)
அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 2,534 இடங்களில் தினந்தோறும் தடுப்பூசி போடுவதில் மாற்றம் இருக்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ரூ 1.11 கோடி செலவில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் பணியிடங்களுக்கான 6 பணி நியமன ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
போலியோ இல்லாத இந்தியாவிற்காக போலியோ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. போலியோ பாதிப்பே இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் உள்ளது. 11 ஆண்டுகளாக இந்தியாவில் எங்கேயும் போலியோ கண்டறியப்படவில்லை.
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து போட வேண்டிய குழந்தைகள் எண்ணிக்கை 57 லட்சத்து 61 ஆயிரம் ஆகும். 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 696 இடங்களில் நடமாடும் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
ஏறத்தாழ 2 லட்சம் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பல்ஸ் போலியோ முகாமை 27-ந்தேதி காலை 8 மணிக்கு தேனாம்பேட்டையில் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
12 வயது முதல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. 12, 15 வயதுக்குள் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். சிறார்களுக்கான 3,89,000 தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன. தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு மிக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அனுமதிக்கின்ற நாளில் இருந்து தடுப்பூசி போடப்பட உள்ளது. பல்ஸ் போலியோ முகாமினால் இந்த வாரம் நடத்தப்படவேண்டிய 23 ஆவது மெகா தடுப்பூசி முகாம் அடுத்தவாரத்திற்கு தள்ளி வைக்கப்படுகின்றது.
அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 2,534 இடங்களில் தினந்தோறும் தடுப்பூசி போடுவதில் மாற்றம் இருக்காது. உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அங்கு படிக்கும் மருத்துவ மாணவர்கள் உதவி தேவை என யாரும் அணுகவில்லை. தூதரகங்கள் மூலம் கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ரூ 1.11 கோடி செலவில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் பணியிடங்களுக்கான 6 பணி நியமன ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
போலியோ இல்லாத இந்தியாவிற்காக போலியோ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. போலியோ பாதிப்பே இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் உள்ளது. 11 ஆண்டுகளாக இந்தியாவில் எங்கேயும் போலியோ கண்டறியப்படவில்லை.
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து போட வேண்டிய குழந்தைகள் எண்ணிக்கை 57 லட்சத்து 61 ஆயிரம் ஆகும். 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 696 இடங்களில் நடமாடும் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
ஏறத்தாழ 2 லட்சம் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பல்ஸ் போலியோ முகாமை 27-ந்தேதி காலை 8 மணிக்கு தேனாம்பேட்டையில் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
12 வயது முதல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. 12, 15 வயதுக்குள் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். சிறார்களுக்கான 3,89,000 தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன. தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு மிக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அனுமதிக்கின்ற நாளில் இருந்து தடுப்பூசி போடப்பட உள்ளது. பல்ஸ் போலியோ முகாமினால் இந்த வாரம் நடத்தப்படவேண்டிய 23 ஆவது மெகா தடுப்பூசி முகாம் அடுத்தவாரத்திற்கு தள்ளி வைக்கப்படுகின்றது.
அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 2,534 இடங்களில் தினந்தோறும் தடுப்பூசி போடுவதில் மாற்றம் இருக்காது. உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அங்கு படிக்கும் மருத்துவ மாணவர்கள் உதவி தேவை என யாரும் அணுகவில்லை. தூதரகங்கள் மூலம் கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படியுங்கள்... ஜெயக்குமார் ஜாமின் மனு விசாரணை தள்ளி வைப்பு- சென்னை கோர்ட்டு உத்தரவு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X