என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![மலர்க்கேடய சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்கப்பெருமான். மலர்க்கேடய சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்கப்பெருமான்.](https://img.maalaimalar.com/Articles/2022/Feb/202202201456199434_Tamil_News_Thoothukudi-News-Tiruchendur-Temple-Maasi-Festival_SECVPF.gif)
X
மலர்க்கேடய சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்கப்பெருமான்.
திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் மலர்க்கேடய சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா
By
மாலை மலர்19 Feb 2022 8:19 AM GMT (Updated: 20 Feb 2022 9:26 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழாவையொட்டி மலர்க்கேடய சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற மாசித்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடந்த விழாவில் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 16-ந் தேதியும், நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவமும் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று மாலையில் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் சுவாமி, அம்மன் வீதிஉலா வந்து வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் திருவிழா மண்டபம் சேர்ந்தனர்.
அங்கு அபிஷேக அலங்காரம் ஆகி சுவாமி குமரவிடங்கப்பெருமானும், தெய்வானை அம்பாளும் தனித்தனி மலர்க்கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் திருக்கோவிலை சேர்ந்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற மாசித்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடந்த விழாவில் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 16-ந் தேதியும், நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவமும் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று மாலையில் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் சுவாமி, அம்மன் வீதிஉலா வந்து வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் திருவிழா மண்டபம் சேர்ந்தனர்.
அங்கு அபிஷேக அலங்காரம் ஆகி சுவாமி குமரவிடங்கப்பெருமானும், தெய்வானை அம்பாளும் தனித்தனி மலர்க்கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் திருக்கோவிலை சேர்ந்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)