search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலர்க்கேடய சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்கப்பெருமான்.
    X
    மலர்க்கேடய சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்கப்பெருமான்.

    திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் மலர்க்கேடய சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழாவையொட்டி மலர்க்கேடய சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற மாசித்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடந்த விழாவில் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 16-ந் தேதியும், நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவமும் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று மாலையில் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் சுவாமி, அம்மன் வீதிஉலா வந்து வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் திருவிழா மண்டபம் சேர்ந்தனர்.

    அங்கு அபிஷேக அலங்காரம் ஆகி சுவாமி குமரவிடங்கப்பெருமானும், தெய்வானை அம்பாளும் தனித்தனி மலர்க்கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.  பின்னர் திருக்கோவிலை சேர்ந்தனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×