search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிச்சிப்பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா தொடக்கம்

    சேலம் கிச்சிப்பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா தொடங்கியது.
    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசித் திருவிழாவின் மகா சிவராத்திரி திருவிழா கொடிமரம் ஏற்றும் நிகழ்ச்சி தொடங்கியது. சேலம் கிச்சிப்பாளையம் கருவாட்டு பாலம் அருகே உள்ள திருக்கோவில் அம்மனின் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மூலவரான அங்கு அங்காள பரமேஸ்வரி உற்சவருக்கு சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பம்பை மேளங்கள் முழங்க நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் நடனமாடி அம்மனை வழிபட்டனர். 

    இதனையடுத்துமாசி மாதம் 17ம் தேதி ஸ்ரீ அங்கு அங்காளம்மன் பிறப்பு மற்றும் காவலாளிகளுக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து கோவில் பூசாரி குறத்தி வேடம் அணிந்து குறக் கூடை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

    இதனையடுத்து மாசி 18ஆம் தேதி மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    Next Story
    ×