search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வெள்ளகோவிலில் ரூ.1.10 கோடிக்கு தேங்காய் பருப்பு ஏலம்

    215 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 30ஆயிரத்து 441கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். 

    நேற்று 215 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 30ஆயிரத்து 441கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த17 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 90.40 லட்சத்திற்கும், குறைந்தபட்சம் ரூ.76.85 லட்சத்திற்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ. 1 கோடியே 10லட்சத்து 19 ஆயிரத்து 678க்கு வணிகம் நடைபெற்றது.
    Next Story
    ×