search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய் பருப்பு"

    • திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் மூலம் விற்பனை நடைபெற்றது
    • ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் செய்திருந்தார்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் மூலம் விற்பனை நடைபெற்றது.

    இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 4 விவசாயிகள், 15 மூட்டைகள் (704 கிலோ) தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர்.

    இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.53 ஆயிரத்திற்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.89-க்கும், குறைந்த பட்சமாக ரூ.62-க்கும், சராசரியாக ரூ.88- க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் செய்திருந்தார்.

    • நேற்று (செவ்வாய்கிழமை) 229 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 36 ஆயிரத்து 367 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்
    • மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 74 ஆயிரத்து 226- க்கு வணிகம் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய் அன்று தேங்காய் பருப்பும், வியாழன் அன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று (செவ்வாய்கிழமை) 229 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 36 ஆயிரத்து 367 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கயம், முத்தூர், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளை சேர்ந்த 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 89.89 க்கும், குறைந்தபட்சமாக ரூ.63.89 க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 74 ஆயிரத்து 226- க்கு வணிகம் நடைபெற்றது. இந்த தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர்.
    • ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ.ராமன் செய்திருந்தார்.

     முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 4 விவசாயிகள் 18 மூட்டைகள் (902 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.74 ஆயிரத்திற்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.84-க்கும், குறைந்த பட்சமாக ரூ.60-க்கும், சராசரியாக ரூ.60- க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ.ராமன் செய்திருந்தார்.

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 5 ஆயிரத்து 45 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.84.50-க்கும், குறைந்தபட்ச விலையாக என ரூ.60.10-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருட்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று காலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 5 ஆயிரத்து 45 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். டெண்டர் முறையில் நடந்த ஏலத்தில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.26.20-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.35-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் 63 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.84.50-க்கும், குறைந்தபட்ச விலையாக என ரூ.60.10-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 2 ஆயிரத்து 52 தேங்காய்களும், 21 தேங்காய் பருப்பு மூட்டைகளும் கூடுதலாக ஏலம் விடப்பட்டது. இதில் தேங்காய் ஒரு கிலோவிற்கு ரூ.1.40-ம், தேங்காய் பருப்பு ஒரு கிலோவிற்கு ரூ.6.85-ம் கூடுதலாக விவசாயிகளுக்கு கிடைத்தது.ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு 4 டன் அளவில் மொத்தம் ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 65-க்கு வேளாண் விளை பொருட்கள் ஏலம் விடப்பட்டது.இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்து 970-க்கு தேங்காய் பருப்பு மற்றும் எள் ஆகியவை விற்பனையானது.

    மொடக்குறிச்சி, அக்.21-

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 84 மூட்டை கள் கொண்ட 3 ஆயிரத்து 510 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல்தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.82.83 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.85.65 காசுகள், சராசரி விலையாக ரூ.84.65 காசுகள் என்ற விலை களிலும் ,

    2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.65.19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.79.60 காசுகள், சராசரி விலையாக ரூ.73.19 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 243-க்கு விற்பனையானது.

    இதேபோல சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் நடந்த ஏலத்தில் 283 கிலோ எடையுள்ள எள் விற்பனை யானது. விற்பனையான எள்ளில் கருப்பு ரக எள் கிலோ ஒன்றுக்கு குறை ந்த பட்ச விலையாக ரூ.166.29 காசுகள்,

    அதிகபட்ச விலை யாக ரூ.166.29 காசுகள், என்ற விலை களிலும் சிவ ப்பு ரக எள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.176.99 காசுகள், அதிக பட்ச விலை யாக ரூ.176.99 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.48 ஆயிரத்து 727-க்கு விற்பனையானது.

    மொத்தம் அவல்பூந்துறை மற்றும் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்க ளில் சேர்த்து ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்து 970-க்கு தேங்காய் பருப்பு மற்றும் எள் ஆகியவை விற்பனையானது.

    • 100விவசாயிகள் கலந்து கொண்டு 59ஆயிரத்து 293கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்
    • மொத்தம் ரூ.43லட்சத்து 6ஆயிரத்து 728க்கு வணிகம் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு , வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை 100விவசாயிகள் கலந்து கொண்டு 59ஆயிரத்து 293கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 10வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 80.69 க்கும், குறைந்தபட்சம் ரூ.60 க்கும் கொள்முதல் செய்தனர்.

    நேற்று மொத்தம் ரூ.43லட்சத்து 6ஆயிரத்து 728க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி மற்றும் தேங்காய் பருப்புகள் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
    • பொது ஏலத்தில் பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.5,488 முதல் ரூ.7,342 வரை விற்பனையானது.

    எடப்பாடி:

    எடப்பாடி நெடுங்குளம் சாலையில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி மற்றும் தேங்காய் பருப்புகள் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது. பொது ஏலத்தில் பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.5,488 முதல் ரூ.7,342 வரை விற்பனையானது. இது போல் நடைபெற்ற தேங்காய் பருப்புகளுக்கான பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.7,485 முதல் 7,585 வரை வேலை போனது. 2-ம் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.6,675 முதல் ரூ.7025 வரை விற்பனையானது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்பு மற்றும் பருத்தி வணிகம் நடைபெற்றது.

    • 105 விவசாயிகள் கலந்து கொண்டு 70ஆயிரத்து 1கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • நேற்று மொத்தம் ரூ.48 லட்சத்து 96 ஆயிரத்து 446 க்கு வணிகம் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு , வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று செவ்வாய்கிழமை 105 விவசாயிகள் கலந்து கொண்டு 70ஆயிரத்து 1கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 78.76 க்கும், குறைந்தபட்சம் ரூ.57.68 க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.48 லட்சத்து 96 ஆயிரத்து 446 க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • கருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற போது ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்காக சுமார் 150 மூட்டை தேங்காய் பருப்பு.
    • இந்த பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.7,431 முதல் ரூ.7,639 வரை விற்பனையானது.

    எடப்பாடி:

    கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள கருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற போது ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்காக சுமார் 150 மூட்டை தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இந்த பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.7,431 முதல் ரூ.7,639 வரை விற்பனையானது. 2-ம் ரக தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.5,889 முதல் ரூ.7,325 வரை விலைபோனது. இதன் மூலம் ரூ. 2 லட்சத்து 72 ஆயிரத்து 626-க்கு தேங்காய் பருப்புகள் ஏலம் போனது. 

    • 125 விவசாயிகள் கலந்து கொண்டு 64ஆயிரத்து 921கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மொத்தம் ரூ.45லட்சத்து ஆயிரத்து 600க்கு வணிகம் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு, வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை 125 விவசாயிகள் கலந்து கொண்டு 64ஆயிரத்து 921கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 77.90 க்கும், குறைந்தபட்சம் ரூ.58 க்கும் கொள்முதல் செய்தனர்.

    நேற்று மொத்தம் ரூ.45லட்சத்து ஆயிரத்து 600க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • 152 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 3 ஆயிரத்து 585 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மொத்தம் ரூ.75லட்சத்து 38ஆயிரத்து 405 க்கு வணிகம் நடைபெற்றது

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று செவ்வாய்கிழமை 152 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 3 ஆயிரத்து 585 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 80.71 க்கும், குறைந்தபட்சம் ரூ.59.19க்கும் கொள்முதல் செய்தனர்.

    மொத்த ரூ.75லட்சத்து 38ஆயிரத்து 405 க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • 131விவசாயிகள் கலந்து கொண்டு 94 ஆயிரத்து 245 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 78.75 க்கும், குறைந்தபட்சம் ரூ.58.85க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும் வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று செவ்வாய்கிழமை 131விவசாயிகள் கலந்து கொண்டு 94 ஆயிரத்து 245 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 78.75 க்கும், குறைந்தபட்சம் ரூ.58.85க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.68லட்சத்து 26ஆயிரத்து 45க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    ×