search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.24லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை
    X

    கோப்புபடம்.

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.24லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

    • 32 ஆயிரத்து735கிலோ தேங்காய்பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்
    • தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.83.65க்கும், குறைந்தபட்சம் ரூ.60.60க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வார ம்தோறும் செவ்வாயன்று தேங்காய்பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.இந்தஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வருவார்கள், இந்த வாரம் செவ்வாய்கி ழமை 82 விவசாயிகள் கலந்து கொண்டு 32 ஆயிரத்து735கிலோ தேங்காய்பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இதில் வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த 13வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகப ட்சமாக ரூ. 83.65க்கும், குறைந்தபட்சம் ரூ.60.60க்கும் கொள்முதல் செய்தனர்.

    நேற்று மொத்தம் ரூ.24லட்சத்து 4ஆயிரத்து 580க்கு வணிகம் நடை பெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணி ப்பாளர் மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    Next Story
    ×