search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் ரூ.50 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு விற்பனை
    X

    கோப்புபடம்.

    வெள்ளகோவிலில் ரூ.50 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு விற்பனை

    • 70 ஆயிரத்து 924கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 82.35க்கும், குறைந்தபட்சம் ரூ.60.40க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும், வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலமும் வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்வார்கள். நேற்று செவ்வாய்கிழமை 157விவசாயிகள் கலந்து கொண்டு 70 ஆயிரத்து 924கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர், இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 11 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 82.35க்கும், குறைந்தபட்சம் ரூ.60.40க்கும் கொள்முதல் செய்தனர்.

    நேற்று மொத்த ரூ.50லட்சத்து 37ஆயிரத்து 339க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    Next Story
    ×