search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லையில் ரூ.2.17 லட்சம் பணத்துடன் சிக்கிய வாலிபர்

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வானியன்குளம் பகுதியில் ரூ.2.17 லட்சம் பணத்துடன் வாலிபர் சிக்கினார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் பறக்கும் படையினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

    முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வானியன்குளம் பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்ப தாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பறக்கும் படையினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.

    அப்போது அங்குள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது அவரிடம் ரூ.2.17 லட்சம் இருப்பது தெரியவந்தது.

    தொடர் விசாரணையில் அவர் மதுரையில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. அவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லாததால்  அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்ததா என்று விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×