search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    புளியங்குடியில் திருமணமான 6 மாதத்தில் சாலை விபத்தில் வாலிபர் பலி

    புளியங்குடியில் திருமணமான 6 மாதத்தில் சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என்.புதுக்குடி பகுதியை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மகன் பொன்ராஜ் (வயது 26). இவர் புளியங்குடியில் உள்ள ஒரு மொபைல் கடையில் வேலை செய்து வந்தார்.

    நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் பள்ளிவாசல் பஸ் நிலையம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் பொன்ராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பொன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். பொன்ராஜிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

    இந்நிலையில் அவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×