என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
இலத்தூர்-அச்சன்புதூர் சாலையில் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை
Byமாலை மலர்2 Feb 2022 3:57 PM IST (Updated: 2 Feb 2022 3:57 PM IST)
செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் பெரியகுளம். சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் இருந்து சற்று தொலைவில் உள்ளது இலத்தூர் பெரியகுளம். இந்த குளத்து கரை வழியாக இலத்தூர், திருவெற்றியூர், அச்சன்புதூர், வடகரை உள்ளிட்ட கிராமங்களில் இணைக்கும் இணைப்பு சாலையில் குளத்துகரை மட்டுமே ஒரு கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
தென்காசியில் இருந்து இலத்தூர் நெடுவயல், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த வழிதடத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த வழித் தடத்தில் தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் விஷசந்துகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தற்போது அந்த சாலை விரிவுபடுத்தப்பட்டு தார்சாலை அமைக்கப் பட்டுள்ளது. எனினும் அங்கு ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது.
இரவு நேரங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிப்பதோடு தெரு விளக்குகளும் இல்லாததால் விபத்தில் சிக்கும் நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
எனவே உடனடி யாக அங்கு மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X