search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    சப் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

    பெரியகுளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சப்கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சி 4 மற்றும் 5வது வார்டு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கு 3 தெருக்களின் பொதுப்பாதையினை கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளதை அகற்ற கோரிக்கை விடுத்தனர். பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

    எனவே இந்த பொதுப்பாதை சம்மந்தமாக இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில் பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது வட்டாட்சியர் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றாமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதை கண்டித்து கண்டன கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து சார் ஆட்சியரிடம் கிராம மக்கள் தங்கள் கோரிக்கை மனுவை அளித்துச் சென்றனர்.
    Next Story
    ×