search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள்.

    குட்கா பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது

    ஈத்தாமொழி அருகே குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    நாகர்கோவில்:

    ஈத்தாமொழியை அடுத்த பெரியவிளை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பாக்குகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஈத்தாமொழி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு ஈத்தாமொழி சப்-இன்ஸ்பெக்டர் பொன் கீதா தலைமையிலான போலீசார்விரைந்து சென்று அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். 

    அப்போது பெரிய விளையைச் சேர்ந்த ஆதிலிங்கம் (வயது55) என்பரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 175 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 217 போதை பாக்குகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

    இது தொடர்பாக ஆதிலிங்கத்திடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தேரிமேல்விளையைச் சேர்ந்த சுயம்புலிங்கம் (40) மற்றும் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த கண்ணன் (55) ஆகியோர் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்தது. 

    இதையடுத்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ஆதிலிங்கம் உட்பட மூவரையும் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×