search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைதான 2 பேர்
    X
    கைதான 2 பேர்

    திருப்பரங்குன்றம் ஆஸ்பத்திரியில் திருடிய 2 பேர் கைது

    ஆஸ்பத்திரியில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மதுரை


    மதுரை திருப்பரங்குன்றத்தில் அரசு ஆஸ்பத்திரி சித்தா பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு அடிக்கடி திருட்டு நடப்பதாக   உதவி மருத்துவ அதிகாரி டாக்டர் அன்னகாமு திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். 

    இதன் அடிப்படையில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா,  துணை கமிஷனர் தங்கதுரை, திருப்பரங்குன்றம் உதவி கமிஷனர் ரவி ஆகியோர் உத்தரவின்பேரில், திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.  

    அவர் அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தார். 

    அப்போது ஆஸ்பத்திரியில் குப்பை பொறுக்கும் 2 பேர் சித்த மருத்துவ பிரிவில் பொருட்கள் மற்றும் பாத்திரங்களை திருடுவது தெரியவந்தது. அவர்களை  பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 
     
    இதில் அவர்கள் திருட்டு செயலில் ஈடுபட்டது உறுதியானதால் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள்  சிவகங்கை மாவட்டம் மணலூர் காந்திஜி ரோடு சேகர் (வயது 45), முத்துப்பட்டி பாண்டியன் நகர் அழகர் (37) என்பது தெரிய வந்தது.
    Next Story
    ×