search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வீட்டில் மதுபதுக்கி விற்ற வாலிபர் கைது

    கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில், ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    தென்காசி:

    கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில், ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து கடையநல்லூர் சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள நடராஜன் (வயது 39) என்பவருடைய வீட்டில் ஏராளமான மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    உடனடியாக போலீசார் நடராஜனை கைது செய்தனர். அங்கு இருந்த 227 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதுபோல தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மது பாட்டில்கள் பதுக்கி விற்ற சுமார் 10 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து, ஏராளமான மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×