search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை கொள்ளை
    X
    நகை கொள்ளை

    கோவையில் வங்கி மேலாளர் வீட்டில் நகை கொள்ளை

    கோவையில் அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு சம்பவம் நடந்தது.
    கோவை:

    கோவை பேரூரை அடுத்த குப்பனூர் கோல்டன் நகரை சேர்ந்தவர் ஹரிபிரசாத்  (வயது 31). இவர் காந்திபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வரருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வங்கி வேலை சம்பந்தமாக சென்னை சென்றார்.

    வீட்டில் அவரது பெற்றோர் இருந்து வந்தனர். அவர்களும் வீட்டை பூட்டி விட்டு கனியூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றனர்.  அப்போது  அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் ஹரிபிரசாத்தின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தார். 

    உடனே அவர் ஹரிபிரசாத்துக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார். இதைகேட்ட அவர் உடனே வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2பவுன் தங்க நகை  மற்றும் டி.வி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    பொள்ளாச்சி கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (70). இவர் வஞ்சியாபுரம் பிரிவில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று  அவர் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றார்.

    மறுநாள் காலை வழக்கம்போல கடைக்கு வந்தார்.  அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ள சென்று  பார்த்தபோது கடையில் இருந்த  ரூ.2 ஆயிரம்  மதிப்புள்ள சிகரெட் பெட்டிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதேபோன்று மணிகண்டன் கடைக்கு அருகில் உள்ள ஆவின் பூத் மற்றும் நாகராஜ் என்பவர் கடையிலும் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து போத்தனூர் போலீசில் மணிகண்டன் புகார் அளித்தார்.  கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள செந்தில் ஜனதா நகரைச் சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். 

    இவர் கடந்த 13-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் குன்னூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். அப்போது இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்  பீரோவில் இருந்த 21 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செய்யது இப்ராகிமின் வீட்டிற்கு அருகே வசித்த நெல்லை மாவட்டம் கடம்பன் குளத்தைச் சேர்ந்த சுடலைகண்ணன் (28) என்பவர் வீட்டின் கதவை உடைத்து கொள்ளைய டித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார்  சுடலைகண்ணனை கைது செய்தனர். அவரிடமிருந்து 21 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.  
    Next Story
    ×