search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

    நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    மன்னார்குடியில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    மன்னார்குடி:

    அரசு அறிவித்த கொரோனா முன்கள பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் உடன் வழங்க வேண்டும், நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும், 

    கொரோனா தொற்றினால் இறந்த நிரந்தர தூய்மைப் பணியாளருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடியில் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு சங்க தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் முருகையன் கலந்து கொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினார். 

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மன்னார்குடி நகராட்சி ஒப்பந்த தொழிலாளர் சங்க கவுரவத் தலைவர் ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×