என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்25 Jan 2022 10:01 AM GMT (Updated: 25 Jan 2022 10:01 AM GMT)
மன்னார்குடியில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மன்னார்குடி:
அரசு அறிவித்த கொரோனா முன்கள பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் உடன் வழங்க வேண்டும், நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்,
கொரோனா தொற்றினால் இறந்த நிரந்தர தூய்மைப் பணியாளருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடியில் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு சங்க தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் முருகையன் கலந்து கொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மன்னார்குடி நகராட்சி ஒப்பந்த தொழிலாளர் சங்க கவுரவத் தலைவர் ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X