search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    பெண்ணிடம் ரூ.70 ஆயிரம் திருட்டு

    பெண்ணிடம் ரூ.70 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 35). இவர், மீஞ்சூரில் செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இவர், விழுப்புரத்தில் இருந்து பஸ்சில் நேற்று காலை கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார். பின்னர் அங்குள்ள கழிவறைக்கு வெளியே தனது பையை வைத்துவிட்டு உள்ளே சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது பையை காணவில்லை. மர்மநபர்கள் அதனை திருடிச்சென்றுவிட்டனர். அதில் செங்கல் சூளை உரிமையாளரிடம் கொடுக்க ரூ.70 ஆயிரம் வைத்து இருந்தார். இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×