search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்குதல்
    X
    மின்சாரம் தாக்குதல்

    வீட்டு மாடியில் விளையாடிய 2 சிறுமிகளை மின்சாரம் தாக்கியது

    குடியிருப்பு அருகே செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. பொன்னேரி நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் நாகலட்சுமி (வயது 16).

    அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு துப்புரவுத் தொழிலாளியான மூர்த்தி என்பவரது மகள் மணிமேகலை (3). நேற்று மாலை சிறுமிகள் மணிமேகலையும், நாகலட்சுமியும் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் சிறுமிகளை தாக்கியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய சிறுமிகள் நாகலட்சுமி, மணிமேகலை ஆகிய 2 பேரையும் உடனடியாக மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    குடியிருப்பு அருகே செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×