என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பட்டதாரி ஆசிரியர் கழக தேர்தல்
Byமாலை மலர்19 Jan 2022 9:55 AM GMT (Updated: 19 Jan 2022 9:55 AM GMT)
பட்டதாரி ஆசிரியர் கழக புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
திருவாரூர்:
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்தல் கஸ்தூரிபா காந்தி மெட்ரிக். பள்ளியில் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் நடந்தது. மயிலாடுதுறை மாவட்ட பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் செங்குட்டுவன் தேர்தல் நடத்தும் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.
திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், வலங்கைமான் ஆகிய வட்டங்களில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வட்ட பொறுப்பாளர்கள் தேர்தலில் பங்கேற்றனர்.
தேர்தலில் ஆர்.முத்துவேல் மாவட்டத் தலைவராகவும், க.கருணாகாளிதாசன் மாவட்டச் செயலாளராகவும், எஸ்.கார்த்தி மாவட்ட பொருளாளராகவும், ஆர்.ஆதித்தன் மாவட்ட அமைப்புச் செயலாள ராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கரோலின் அற்புத ராணி மாவட்ட மகளிர் அணிச் செயலாளராகவும், வி.சி.ரமேஷ்குமார், ஜெ.மணிவண்ணன், பா.ரகு, எஸ்.சுபாஷ் சந்திரபோஸ், வ.இளங்கோவன், கே.சந்திரபோஸ், டி.மணிகண்டன் ஆகியோர் மாநில பொதுக்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிறைவாக மாவட்ட பொருளாளர் எஸ். கார்த்தி நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X