என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாவூர்சத்திரத்தில் பீடிக்கடையை முற்றுகையிட்ட பெண்கள்
Byமாலை மலர்19 Jan 2022 9:12 AM GMT (Updated: 19 Jan 2022 9:12 AM GMT)
பாவூர்சத்திரத்தில் கடந்த 6 மாத காலமாக தரமான இலைகள் வழங்காததாக கூறி, கடை முன்பு பீடி சுற்றும் பெண்கள் திடீரென திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீ. கே. புதூர்:
பாவூர்சத்திரம்- சுரண்டை சாலையில் தனியார் பீடி கடை அமைந்துள்ளது. இங்கு கீழப்பாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பீடி சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 6 மாத காலமாக தரமான இலைகள் வழங்காததாக கூறி, கடை முன்பு பீடி சுற்றும் பெண்கள் திடீரென திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பீடி கம்பெனி நிர்வாகத்தினரிடம் பாவூர்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் வரும் நாட்களில் தரமான பீடி இலை வழங்கப்படும் என்று நிர்வாகம் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X