search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கும்மிடிப்பூண்டி அருகே செல்போன் திருடிய வடமாநில வாலிபர் சிக்கினார்

    கும்மிடிப்பூண்டி அருகே செல்போன் திருடிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ம.பொ.சி. நகரை சேர்ந்த வியாபாரி தமீன் அன்சாரி (வயது 48). இவரது வீட்டுக்குள் நேற்று முன்தினம் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்து செல்போனை திருடிச்சென்றார்.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அதே பகுதியில் வசித்து வரும் ஓடிசாவை சேர்ந்த அஜய்குமார் (35) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×