search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீரில் மூழ்கி பலி
    X
    நீரில் மூழ்கி பலி

    பொன்னேரி அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

    பொன்னேரி அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வெண்பாக்கம், சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது50). வாத்து மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.

    நேற்று காலை அவர் தனது மனைவியுடன் பெரும்பேடு ஏரியில் வாத்து மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வேறு இடத்திற்கு வாத்துகளை கொண்டு செல்ல ஏரியில் இறங்கினார்.

    அந்த நேரத்தில் வாத்து குஞ்சுஒன்று ஏரியின் நடுவே சென்று விட்டது. அதனை விரட்டியபோது ஏரியில் இருந்த அல்லிக் கொடியில் செல்வராஜ் சிக்கிக் கொண்டார்.இதில் அவர் தண்ணீரில் மூழ்கினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜின் மனைவி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய செல்வராஜை மீட்டு பொன்னேரி அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.

    பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செல்வராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×