என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்துப்பணி அதிகரிக்கப்படும் - புதிய போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பேட்டி
Byமாலை மலர்18 Jan 2022 9:48 AM GMT (Updated: 18 Jan 2022 9:48 AM GMT)
பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் தெரிவித்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த வே.வனிதா சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த ஏ.ஜி.பாபு, ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்று கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
திருப்பூர் மாநகரில் காவல்துறையினர் பொதுமக்களுடன் இணக்கமாக செயல்படுவார்கள். பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கொலை, கொள்ளை, சாலை விபத்துக்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதற்கு முன்பாக இருந்த காவல் ஆணையர்கள் கொண்டு வந்த சிறப்பான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். வழிப்பறி, திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதுடன், இரவு ரோந்து பணி அதிகரிக்கப்படும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X