search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சேவல் சூதாட்டம் - 6 பேர் கைது

    கைதானவர்களிடமிருந்து 4 சேவல்கள் மற்றும் ரொக்க பணம் ரூ.3500ஐ - போலீசார் பறிமுதல் செய்தனர்.
    அவினாசி:

    அவினாசியை அடுத்து குப்பாண்டம்பாளையம் முள்ளுக்காட்டில் சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். 

    இதையடுத்து விரைந்து சென்ற போலீசார், அங்கு மறைவான இடத்தில் சேவலை வைத்து பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட தினேஷ்குமார்( வயது 20), கார்த்திகேயன் (20), செந்தில்குமார் (30), முருகன் (21), திருமூர்த்தி (24), பாண்டி (40) ஆகிய 6 பேர் மீதும் வழக்குபதிவுசெய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 சேவல்கள் மற்றும் ரொக்க பணம் ரூ.3500ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×